Skip to main content

திருவுந்தியார் பாடல்

உள்ளும் புறம்பும் நினைப்பறின்  உன்னுள்ளே
மொள்ளா அமுதாம் என்று உந்தீபற
முளையாது பந்தம் என்று உந்தீபற.

திருவுந்தியார் பாடல் எண்; 26

பொதுவான பொருள் :
.........................................
நமக்குள்ளும், நமக்கு வெளியேயும் ஏற்படுகின்ற நினைப்பற்றுப் போனால் பேரானந்தம் பிறக்கும். அதன்பின் எவ்விதப் பந்தமும் ஏற்படாது.

"குலசை மகானின்" ஞான விளக்கம்:
..................................    ..............................
 முதலில் புறத்தைப் பார்ப்போம்.நாம் புறத்தை(உலகத்தை)ப் பார்க்கும் பொழுது நம்முடைய மனமானது, புறத்தே உள்ள நிஜத்றைப் பார்க்கவிடாமல் மனம் உண்டாக்கின பதிவையே காட்டுகிறது. பதிவுகளால் நாம் நிஜத்தை மறந்து, அந்தப் பதிவுகளின் அடிப்படையில் இயங்கத் துவங்குகிறோம். எடுத்துக்காட்டாக, வாசலில் வரும் ஒருவரைக் கண் காட்டுகிறது. அவர் ஒரு வாரத்திற்கு முன்பு நம்மிடம் சண்டையிட்டுச் சென்றவர்; அவரைப் பார்த்தவுடனே மனம் அவரைப் பற்றிய, பழைய பதிவுகளைக் காட்டி, வெறுப்பை உண்டாக்கி பதட்டமடைய வைத்து விடுகிறது.உண்மையில் அவர் வந்தது சண்டையிடுவதற்காகவா? அல்லது மன்னிப்புக் கேட்பதற்காகவா? என்பது நமக்குத் தெரியாது. அவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கக் கூட வந்திருக்கலாம். ஆனால் நம் மனமோ பழைய பதிவுகளை முன்னிறுத்தி, அவர்மீது வெறுப்பைக் காட்டி மீண்டும் மீண்டும் பழைய நினைவுகளில் கிடந்து தத்தளிக்கிறது.

ஆகவே புறத்தில் நடக்கின்ற செயல்களெல்லாம் இறைவன் செயல், அவனன்றி ஓர் அணுவும் அசையாது போன்ற கருத்துக்களை மனதில் உறுதிப்படுத்தினால், மனம் வெளிமுகமாகச் சென்று நம்மை அலைக்கழிப்பதை நிறுத்தி விடும். இதனால் புறத்தே நடக்கின்ற செயல்கள் மூலம் வரும் நினைப்புகள் நம்மை விட்டு அகன்று விடும்.

அது போல் உட்புறத்தில் மனமானது தாறுமாறாக  தொடர்ந்து எண்ணங்களை உருவாக்கி நம்மை ஓய்வடையச் செய்யாமல் குழப்பிக் கொண்டேயிருக்கிறது. ஓயாமல் தொடர்ந்து ஏற்படும் எண்ணங்களைச் சிறிது ஊன்றிக் கவனித்தால், எண்ண ஓட்டம் குறையும். தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்தால், மனம் தேவையில்லாமல் எண்ணுவதைக் கைவிட்டுவிடும்.

இவ்வாறு உள்ளும், புறமும் நினைப்பு அறுந்தால், அள்ள அள்ளக் குறையாத ஆனந்தம் பெருகும். நம்மைப் பந்தப் படுத்துவது, இந்த கற்பனையான நினைவுகளேயாகும். நினைப்புகள் அறுந்தால் பந்தம் முளைக்காது.

இதன் மைய கருத்து :
.......................................
உள்ளே
சிந்தித்துச் சிந்தித்து சிவமே ஆவாய்.
வெளியே
பாவித்துப் பாவித்து பரமே ஆவாய்.

அதாவது மேலே கூறப்பட்ட கருத்தை நன்றாக சிந்திந்து புரிந்து கொண்டால் சிவமாகி விடுவீர்கள். பின்பு அதையே வாழ்க்கையில் கடைபிடித்தால் ( பாவித்தால்) பரமாகி விடுவீர்கள்.

நன்றி; Rajamarthandam Santhakumar

Comments

Popular posts from this blog

ஸ்படிகமாலை

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன  நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.  அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிகப் பாறைகள்  ஆறு மற்றும் ஏழு  பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. ஸ்படிகமாலை கோர்க்கும்முறை  ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாத...

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்?

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? கேள்வி - உண்மையான பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? பக்தனுக்கு சோதனை தராமல் அருள் செய்யும் கடவுளே இல்லையா?    இராம் மனோகர் - ஒருவரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லிக் கடன் வாங்கிச் செலுத்திக் கொண்டே வருகிறோம். வட்டியைத்தான் செலுத்த முடிகிறதே தவிர, கடன் அடைந்த பாடில்லை. குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி அதை, இதை விற்றாவது முழுக் கடனையும் அடைத்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறோம். நகை நட்டு, நிலபுலன்கள் என்று அனைத்தையும் விற்றுக் கடனை அடைத்து விட்டு அமைதியடைகிறோம். மொத்த கடனையும் அடைக்க வேண்டும் எனும் பொழுது மிகுந்த சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனினும் கடனை அடைத்து விட்டால் பெரிய நிம்மதி வந்து விடுகிறது. அது போலத்தான் உண்மையான பக்தன் நிலையும் இருக்கிறது. மாதா மாதம் வட்டி செலுத்துவது போல, வினைகளை அனுபவிப்பதும், மேலும் வினைகளைப் பெருக்கிக் கொள்வதும் சராசரி மனிதனின் நிலையாக இருக்கிறது. ஆனால், பக்தன் அவ்வாறு அல்லவே ? அவன் மொத்த வினைகளையும் வேரறுக்க நினைக்கிறான். இந்தப் பிறவியிலேயே வின...

தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர் தென்னிந்திய இராஜபுத்திரர்கள்

பிறந்தசாதி பெருமையை அறிவோம். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥வன்னியர் மட்டுமே சத்ரியர். அரசு ஆணை எண் .271. நாள்.13.6.1929.ல் வெளியீடு . 🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥 🔥தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர். தென்னிந்திய இராஜபுத்திரர்கள். 🔥தமிழ்நாட்டில், "வன்னிய குல சத்ரியர்" 🔥ஆந்திராவில், "அக்னி குல சத்ரியர் " 🔥கேரளாவில், "சம்பு குல சத்திரியர்" 🔥கர்நாடாகாவில், "திகளர் குல சத்ரியர்"  🔥என தென்னிந்தியா முழுவதும், அரசாணை வழங்கப்பட்டது. 🔥கி.பி1886.இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல சத்ரிய" மஹா சங்கம், மதராஸ் பிரசிடென்சியில், 🔥 மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது. 🔥வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்" எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து  🔥வன்னியர்கள் "சத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள். 🔥பின்பு நாங்களும் சத்ரியர்தான் என்...