உள்ளும் புறம்பும் நினைப்பறின் உன்னுள்ளே
மொள்ளா அமுதாம் என்று உந்தீபற
முளையாது பந்தம் என்று உந்தீபற.
திருவுந்தியார் பாடல் எண்; 26
பொதுவான பொருள் :
.........................................
நமக்குள்ளும், நமக்கு வெளியேயும் ஏற்படுகின்ற நினைப்பற்றுப் போனால் பேரானந்தம் பிறக்கும். அதன்பின் எவ்விதப் பந்தமும் ஏற்படாது.
"குலசை மகானின்" ஞான விளக்கம்:
.................................. ..............................
முதலில் புறத்தைப் பார்ப்போம்.நாம் புறத்தை(உலகத்தை)ப் பார்க்கும் பொழுது நம்முடைய மனமானது, புறத்தே உள்ள நிஜத்றைப் பார்க்கவிடாமல் மனம் உண்டாக்கின பதிவையே காட்டுகிறது. பதிவுகளால் நாம் நிஜத்தை மறந்து, அந்தப் பதிவுகளின் அடிப்படையில் இயங்கத் துவங்குகிறோம். எடுத்துக்காட்டாக, வாசலில் வரும் ஒருவரைக் கண் காட்டுகிறது. அவர் ஒரு வாரத்திற்கு முன்பு நம்மிடம் சண்டையிட்டுச் சென்றவர்; அவரைப் பார்த்தவுடனே மனம் அவரைப் பற்றிய, பழைய பதிவுகளைக் காட்டி, வெறுப்பை உண்டாக்கி பதட்டமடைய வைத்து விடுகிறது.உண்மையில் அவர் வந்தது சண்டையிடுவதற்காகவா? அல்லது மன்னிப்புக் கேட்பதற்காகவா? என்பது நமக்குத் தெரியாது. அவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கக் கூட வந்திருக்கலாம். ஆனால் நம் மனமோ பழைய பதிவுகளை முன்னிறுத்தி, அவர்மீது வெறுப்பைக் காட்டி மீண்டும் மீண்டும் பழைய நினைவுகளில் கிடந்து தத்தளிக்கிறது.
ஆகவே புறத்தில் நடக்கின்ற செயல்களெல்லாம் இறைவன் செயல், அவனன்றி ஓர் அணுவும் அசையாது போன்ற கருத்துக்களை மனதில் உறுதிப்படுத்தினால், மனம் வெளிமுகமாகச் சென்று நம்மை அலைக்கழிப்பதை நிறுத்தி விடும். இதனால் புறத்தே நடக்கின்ற செயல்கள் மூலம் வரும் நினைப்புகள் நம்மை விட்டு அகன்று விடும்.
அது போல் உட்புறத்தில் மனமானது தாறுமாறாக தொடர்ந்து எண்ணங்களை உருவாக்கி நம்மை ஓய்வடையச் செய்யாமல் குழப்பிக் கொண்டேயிருக்கிறது. ஓயாமல் தொடர்ந்து ஏற்படும் எண்ணங்களைச் சிறிது ஊன்றிக் கவனித்தால், எண்ண ஓட்டம் குறையும். தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்தால், மனம் தேவையில்லாமல் எண்ணுவதைக் கைவிட்டுவிடும்.
இவ்வாறு உள்ளும், புறமும் நினைப்பு அறுந்தால், அள்ள அள்ளக் குறையாத ஆனந்தம் பெருகும். நம்மைப் பந்தப் படுத்துவது, இந்த கற்பனையான நினைவுகளேயாகும். நினைப்புகள் அறுந்தால் பந்தம் முளைக்காது.
இதன் மைய கருத்து :
.......................................
உள்ளே
சிந்தித்துச் சிந்தித்து சிவமே ஆவாய்.
வெளியே
பாவித்துப் பாவித்து பரமே ஆவாய்.
அதாவது மேலே கூறப்பட்ட கருத்தை நன்றாக சிந்திந்து புரிந்து கொண்டால் சிவமாகி விடுவீர்கள். பின்பு அதையே வாழ்க்கையில் கடைபிடித்தால் ( பாவித்தால்) பரமாகி விடுவீர்கள்.
நன்றி; Rajamarthandam Santhakumar
மொள்ளா அமுதாம் என்று உந்தீபற
முளையாது பந்தம் என்று உந்தீபற.
திருவுந்தியார் பாடல் எண்; 26
பொதுவான பொருள் :
.........................................
நமக்குள்ளும், நமக்கு வெளியேயும் ஏற்படுகின்ற நினைப்பற்றுப் போனால் பேரானந்தம் பிறக்கும். அதன்பின் எவ்விதப் பந்தமும் ஏற்படாது.
"குலசை மகானின்" ஞான விளக்கம்:
.................................. ..............................
முதலில் புறத்தைப் பார்ப்போம்.நாம் புறத்தை(உலகத்தை)ப் பார்க்கும் பொழுது நம்முடைய மனமானது, புறத்தே உள்ள நிஜத்றைப் பார்க்கவிடாமல் மனம் உண்டாக்கின பதிவையே காட்டுகிறது. பதிவுகளால் நாம் நிஜத்தை மறந்து, அந்தப் பதிவுகளின் அடிப்படையில் இயங்கத் துவங்குகிறோம். எடுத்துக்காட்டாக, வாசலில் வரும் ஒருவரைக் கண் காட்டுகிறது. அவர் ஒரு வாரத்திற்கு முன்பு நம்மிடம் சண்டையிட்டுச் சென்றவர்; அவரைப் பார்த்தவுடனே மனம் அவரைப் பற்றிய, பழைய பதிவுகளைக் காட்டி, வெறுப்பை உண்டாக்கி பதட்டமடைய வைத்து விடுகிறது.உண்மையில் அவர் வந்தது சண்டையிடுவதற்காகவா? அல்லது மன்னிப்புக் கேட்பதற்காகவா? என்பது நமக்குத் தெரியாது. அவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கக் கூட வந்திருக்கலாம். ஆனால் நம் மனமோ பழைய பதிவுகளை முன்னிறுத்தி, அவர்மீது வெறுப்பைக் காட்டி மீண்டும் மீண்டும் பழைய நினைவுகளில் கிடந்து தத்தளிக்கிறது.
ஆகவே புறத்தில் நடக்கின்ற செயல்களெல்லாம் இறைவன் செயல், அவனன்றி ஓர் அணுவும் அசையாது போன்ற கருத்துக்களை மனதில் உறுதிப்படுத்தினால், மனம் வெளிமுகமாகச் சென்று நம்மை அலைக்கழிப்பதை நிறுத்தி விடும். இதனால் புறத்தே நடக்கின்ற செயல்கள் மூலம் வரும் நினைப்புகள் நம்மை விட்டு அகன்று விடும்.
அது போல் உட்புறத்தில் மனமானது தாறுமாறாக தொடர்ந்து எண்ணங்களை உருவாக்கி நம்மை ஓய்வடையச் செய்யாமல் குழப்பிக் கொண்டேயிருக்கிறது. ஓயாமல் தொடர்ந்து ஏற்படும் எண்ணங்களைச் சிறிது ஊன்றிக் கவனித்தால், எண்ண ஓட்டம் குறையும். தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்தால், மனம் தேவையில்லாமல் எண்ணுவதைக் கைவிட்டுவிடும்.
இவ்வாறு உள்ளும், புறமும் நினைப்பு அறுந்தால், அள்ள அள்ளக் குறையாத ஆனந்தம் பெருகும். நம்மைப் பந்தப் படுத்துவது, இந்த கற்பனையான நினைவுகளேயாகும். நினைப்புகள் அறுந்தால் பந்தம் முளைக்காது.
இதன் மைய கருத்து :
.......................................
உள்ளே
சிந்தித்துச் சிந்தித்து சிவமே ஆவாய்.
வெளியே
பாவித்துப் பாவித்து பரமே ஆவாய்.
அதாவது மேலே கூறப்பட்ட கருத்தை நன்றாக சிந்திந்து புரிந்து கொண்டால் சிவமாகி விடுவீர்கள். பின்பு அதையே வாழ்க்கையில் கடைபிடித்தால் ( பாவித்தால்) பரமாகி விடுவீர்கள்.
நன்றி; Rajamarthandam Santhakumar
Comments
Post a Comment