ஆரூரா.. தொண்டீசா.
அட்சயதிதியை பற்றி ஆதாரபூர்வமான தகவல்கள் மற்றும் தெளிவு
ஆன்மீக பக்தகோடிகளுக்கு வணக்கம்.
அட்சயதிதி ஒன்று இருக்கிறதா ? இல்லையா? வரலாறு உண்டா? இல்லையா? உண்மை தகவல்கள் தான் என்னவென்று நாம் சிந்திப்போம்.. தெளிவடைவோம்.
அட்சய திதி அன்று நகைவாங்கினால் நகை வந்து சேரும் என்று எந்த ஒரு புராணத்திலும் , இதிகாசத்திலும் , ஜோதிட சாத்திரத்திலும் குறிப்பிடவில்லை..
1. ஜோதிட சாஸ்திரத்தில் ஆதாரம் :
திதிகள் மொத்தம் வளர்பிறை திதி 14 .தேய்பிறை திதி 14. அமாவாசை 1. பௌர்ணமி 1. ஆக 30 நாட்கள் ஒரு மாதம்.
இதில் அமாவாசை அன்று நிலவு தெரியாது.
ஆதலால் திதியில் பிரதமை , துதியை , திருதியை .
இந்த திதியில் மூன்றாம் திதியில் தான் சந்திர தரிசனம். அதாவது மூன்றாம் பிறை வருகிறது. இதைதான் திருதியை என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த திதியைதான் கணக்கு வைத்து அதுவும் சித்திரை மாதம் வரும் திருதியை வைத்துக் கொண்டு அட்சய திருதியை என்று அழைக்கின்றனர்.
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் அதுவும் சித்திரை மாதம் வரும் வளர்பிறை மூன்றாம் திதியில் விவசாய பயிர்களுக்கு ஏற்ற நாள் தான் என்று குறிப்பிடப்படுகிறது.
(நன்கு புலமை பெற்ற ஜோதிட ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)
மேலும் பொதுவாக வளர்பிறை மூன்றாம் நாளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் ஜெயமே..
மேலும் அது பிறைபோல் வளரும் என்று ஐதீகம்..
இவை மாதத்திற்கு ஒரு முறை வளர்பிறை வரும்
இதை பிரதானமாக வைத்து நகைக் கடைக்காரர்கள் தந்திரமாக மக்கள் மத்தியில் அவர்கள் ஏழையோ- பணக்காரர்களோ அதை பற்றி கவலை கொள்ளாமல் தன் காரியம் வெற்றியடைந்தால் போதும் என்று அட்ய திதி என்று மிக பிரபலமாக விளம்பரம் செய்கிறார்கள்.
மக்களே ஏமாறாதீர்கள்.
2. அள்ள அள்ள குறையாத அட்சயம் பாத்திரம் உண்டு :
சோழ நாட்டில் திருவையாற்றில் அருகில் சோற்றுத்துறை என்று ஒரு தலம் உள்ளது.
இத்தலத்தில் இறைவி அண்ணப்பூரணியாகவும் சுவாமி தொலையாச் செல்வராகவும் உள்ளார்.
இத்தலபுராணம்படி சிவபக்தன் அவரின் மனைவி சிவ நகையாள் அட்சயம் பாத்திரம் பெற்ற வரலாறு உள்ளது.
3. மகாபாரதத்தில் ஆதாரம் :
மகாபாரதத்தில் மொத்தம் 18 பருவங்கள் உள்ளன :
அதில் 3 ஆவது பருவம் வனப்பருவம்.
இதில்தான் சூரியனிடம் தருமன் அட்சயம் பாத்திரம் பெற்ற வரலாறு உண்டு..
(பசியை போக்கிக் கொள்வதற்கு).
3. மற்றொரு ஆதாரம்
மகாபாரதத்தில் ஜோதிடத்தில் புலமை பெற்ற சகாதேவன்
அட்சய திதியில் நகை வாங்கினால் மேலும் நகை பெருகும் என்று குறிப்பிடவில்லை.
4. சிவபெருமான் சந்திரனை சூட்டிக்கொள்ளல்
தக்ஷனின் 27புத்திரிகளை திருமணம் செய்து கொண்ட சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் மட்டும் அன்பு கொண்டான்..
இதைபொறுக்காமல் ஏனைய பெண்கள் தக்ஷனிடம் முறையிட , தக்ஷன் சந்திரனை நீ தேய்ந்து போய்வாய் என்று .
நாள் செல்ல செல்ல தேய்ந்து வரும் நிலையில் இறுதியாக சிவனிடம் சென்று முறையிட்டான்.
சிவனோ சந்திரனின் நிலைமையை கண்டு தலையில் சூட்டிக்கொண்டான்..
வார் சடைமேல் வளரும்
சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார் போலும். (சோமன் - சந்திரன்)
மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலா கொண்ட நாளே அப்பர் தேவாரம்.
சிவனின் தலையில் இருப்பது மூன்றாம் பிறை சந்திரன் ஆகும்..
இதை மையமாக வைத்து தான் பொதுவிதியின் அடிப்படையில் மூன்றாம் பிறை பார்ப்பது நல்லது என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆக மக்களே தயவு செய்து அட்சய திதியில் நகை வாங்குவது சிறப்பு என்பது நகைக்கடைக்காரர்களின் வியாபார நோக்கத்திற்காகவே என்று இங்கு ஆதார பூர்வமாகவும் - வரலாற்று பூர்வமாகவும் குறிப்பிடுகிறோம்..
நன்கு சிந்தித்து செயல்படுங்கள் பக்தர்களே..
அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் சிறப்பு என்று சொல்லி தனது கணவனை தொந்தரவு செய்யாதீர்கள் மங்கையர்களே..
தங்கள் கணவன் தங்களுக்கு உள் அன்போடு தங்க நகைகளை எந்நாளில் வாங்கித் தருகிறார்களோ அதுவே அட்சய திருதியை.
தொண்டீசன்.. ஈரோடு..
அட்சயதிதியை பற்றி ஆதாரபூர்வமான தகவல்கள் மற்றும் தெளிவு
ஆன்மீக பக்தகோடிகளுக்கு வணக்கம்.
அட்சயதிதி ஒன்று இருக்கிறதா ? இல்லையா? வரலாறு உண்டா? இல்லையா? உண்மை தகவல்கள் தான் என்னவென்று நாம் சிந்திப்போம்.. தெளிவடைவோம்.
அட்சய திதி அன்று நகைவாங்கினால் நகை வந்து சேரும் என்று எந்த ஒரு புராணத்திலும் , இதிகாசத்திலும் , ஜோதிட சாத்திரத்திலும் குறிப்பிடவில்லை..
1. ஜோதிட சாஸ்திரத்தில் ஆதாரம் :
திதிகள் மொத்தம் வளர்பிறை திதி 14 .தேய்பிறை திதி 14. அமாவாசை 1. பௌர்ணமி 1. ஆக 30 நாட்கள் ஒரு மாதம்.
இதில் அமாவாசை அன்று நிலவு தெரியாது.
ஆதலால் திதியில் பிரதமை , துதியை , திருதியை .
இந்த திதியில் மூன்றாம் திதியில் தான் சந்திர தரிசனம். அதாவது மூன்றாம் பிறை வருகிறது. இதைதான் திருதியை என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த திதியைதான் கணக்கு வைத்து அதுவும் சித்திரை மாதம் வரும் திருதியை வைத்துக் கொண்டு அட்சய திருதியை என்று அழைக்கின்றனர்.
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் அதுவும் சித்திரை மாதம் வரும் வளர்பிறை மூன்றாம் திதியில் விவசாய பயிர்களுக்கு ஏற்ற நாள் தான் என்று குறிப்பிடப்படுகிறது.
(நன்கு புலமை பெற்ற ஜோதிட ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)
மேலும் பொதுவாக வளர்பிறை மூன்றாம் நாளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் ஜெயமே..
மேலும் அது பிறைபோல் வளரும் என்று ஐதீகம்..
இவை மாதத்திற்கு ஒரு முறை வளர்பிறை வரும்
இதை பிரதானமாக வைத்து நகைக் கடைக்காரர்கள் தந்திரமாக மக்கள் மத்தியில் அவர்கள் ஏழையோ- பணக்காரர்களோ அதை பற்றி கவலை கொள்ளாமல் தன் காரியம் வெற்றியடைந்தால் போதும் என்று அட்ய திதி என்று மிக பிரபலமாக விளம்பரம் செய்கிறார்கள்.
மக்களே ஏமாறாதீர்கள்.
2. அள்ள அள்ள குறையாத அட்சயம் பாத்திரம் உண்டு :
சோழ நாட்டில் திருவையாற்றில் அருகில் சோற்றுத்துறை என்று ஒரு தலம் உள்ளது.
இத்தலத்தில் இறைவி அண்ணப்பூரணியாகவும் சுவாமி தொலையாச் செல்வராகவும் உள்ளார்.
இத்தலபுராணம்படி சிவபக்தன் அவரின் மனைவி சிவ நகையாள் அட்சயம் பாத்திரம் பெற்ற வரலாறு உள்ளது.
3. மகாபாரதத்தில் ஆதாரம் :
மகாபாரதத்தில் மொத்தம் 18 பருவங்கள் உள்ளன :
அதில் 3 ஆவது பருவம் வனப்பருவம்.
இதில்தான் சூரியனிடம் தருமன் அட்சயம் பாத்திரம் பெற்ற வரலாறு உண்டு..
(பசியை போக்கிக் கொள்வதற்கு).
3. மற்றொரு ஆதாரம்
மகாபாரதத்தில் ஜோதிடத்தில் புலமை பெற்ற சகாதேவன்
அட்சய திதியில் நகை வாங்கினால் மேலும் நகை பெருகும் என்று குறிப்பிடவில்லை.
4. சிவபெருமான் சந்திரனை சூட்டிக்கொள்ளல்
தக்ஷனின் 27புத்திரிகளை திருமணம் செய்து கொண்ட சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் மட்டும் அன்பு கொண்டான்..
இதைபொறுக்காமல் ஏனைய பெண்கள் தக்ஷனிடம் முறையிட , தக்ஷன் சந்திரனை நீ தேய்ந்து போய்வாய் என்று .
நாள் செல்ல செல்ல தேய்ந்து வரும் நிலையில் இறுதியாக சிவனிடம் சென்று முறையிட்டான்.
சிவனோ சந்திரனின் நிலைமையை கண்டு தலையில் சூட்டிக்கொண்டான்..
வார் சடைமேல் வளரும்
சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார் போலும். (சோமன் - சந்திரன்)
மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலா கொண்ட நாளே அப்பர் தேவாரம்.
சிவனின் தலையில் இருப்பது மூன்றாம் பிறை சந்திரன் ஆகும்..
இதை மையமாக வைத்து தான் பொதுவிதியின் அடிப்படையில் மூன்றாம் பிறை பார்ப்பது நல்லது என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆக மக்களே தயவு செய்து அட்சய திதியில் நகை வாங்குவது சிறப்பு என்பது நகைக்கடைக்காரர்களின் வியாபார நோக்கத்திற்காகவே என்று இங்கு ஆதார பூர்வமாகவும் - வரலாற்று பூர்வமாகவும் குறிப்பிடுகிறோம்..
நன்கு சிந்தித்து செயல்படுங்கள் பக்தர்களே..
அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் சிறப்பு என்று சொல்லி தனது கணவனை தொந்தரவு செய்யாதீர்கள் மங்கையர்களே..
தங்கள் கணவன் தங்களுக்கு உள் அன்போடு தங்க நகைகளை எந்நாளில் வாங்கித் தருகிறார்களோ அதுவே அட்சய திருதியை.
தொண்டீசன்.. ஈரோடு..
Comments
Post a Comment