உயிர் என்னும் கடவுள் உன்னிடம் எதிர்பார்ப்பது என்ன?
நம்முள் இருந்துகொண்டு நம்மை விசுவாசிக்கும் உயிரின் விசுவாசமே நம் சுவாசம்.
அப்படியிருக்க நம் உயிரை நாம் விசுவாசிக்க மறந்து, உணர்ச்சிகள் அற்ற ஜடப் பொருட்களின் மேல் பக்தியும் பேராசையும் கொள்தல் மஹா பாபம் இல்லையா.
சிந்தியுங்கள் உங்களை படைத்து உங்களுக்குள் இருந்து உங்களை அசைக்கும் உயிர் ஒன்றே உங்களுக்கு சொந்தமானது, கண்களால் காணும் அத்தனையும் கானல் நீர் போல் மாயையானது ....
எந்த தாயும் தன குழந்தைகளிடம் உடலை வருத்தி வேண்டுதலோ, பயமோ, பக்தியோ அல்லது மந்திர உச்சாடனங்கலையோஎதிர் பார்ப்பது இல்லை.
இவைஎல்லாமே நம் பயத்தாலும் அறியாமையாலும் விளைந்தவை. சில சித்தர்களின் பாசுரங்கள் அன்பு மிகுதியால் விளைந்தவை. நம் தாயான உயிரிடம் நாம் உரிமையோடும் தூய அன்போடும் பழகினால் போதுமானது. அன்பை விட உரிமை முதன்மையானது. நமக்கு முக்திஎன்பதும் பிறப்புரிமை.
உயிர் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்பை மட்டும் தான்.
அடுத்ததாக தான் படைத்த நான் என்று நாம் சொல்லி கொள்ளும் நம் ஊன் சரீரத்தை தனக்கு இரையாக நைவேத்தியமாக எதிர்பார்க்கிறது.
நம் சரீரத்துள் ஆழ்ந்த நிர்விகல்ப நிலையில் இருக்கும் உயிரின் நிலைக்கு, அதாவது மனம் அற்ற, ஆதிக்கு சமமான, சமாதி நிலைக்கு நாம்சென்றால் தான் உயிராக இயலும்.
அப்போது சரீரத்தை உயிர் தனக்கு இரையாக்கி கொள்ளும். பின்அங்கே நாம் ஒளி வடிவாக விளங்கிடலாம்.. இது சித்தர்கள் கண்ட பூரண பொக்கிஷத்தில்உணர்ந்தது.
உயிருடன் வாழும் காலத்தில் கூட உயிருடன் உறவாகி உயிராகி உயிரோடு வாழத் தெரியாத வாழா வெட்டிகளுக்கு மரணம் என்பது மகத்தான உண்மை. ஆனால் உயிருடன் உறவு கொண்டு உறுதியாக உயிருடன் இருப்பவர்களுக்கு எப்படி மரணம் ஏற்ப்படும்.
உயிரை விட்டு நிற்கும் கடவுள் உலகெங்கும் இல்லை. கடவுளை விட்டு உயிர் தனித்தும் இல்லை.
போகனின் வாக்கு...
போகரின் சம்மதம் உயிராலயம் உலகுக்காக, உங்களுக்காக......
உயிரே கடவுள்...
நம்முள் இருந்துகொண்டு நம்மை விசுவாசிக்கும் உயிரின் விசுவாசமே நம் சுவாசம்.
அப்படியிருக்க நம் உயிரை நாம் விசுவாசிக்க மறந்து, உணர்ச்சிகள் அற்ற ஜடப் பொருட்களின் மேல் பக்தியும் பேராசையும் கொள்தல் மஹா பாபம் இல்லையா.
சிந்தியுங்கள் உங்களை படைத்து உங்களுக்குள் இருந்து உங்களை அசைக்கும் உயிர் ஒன்றே உங்களுக்கு சொந்தமானது, கண்களால் காணும் அத்தனையும் கானல் நீர் போல் மாயையானது ....
எந்த தாயும் தன குழந்தைகளிடம் உடலை வருத்தி வேண்டுதலோ, பயமோ, பக்தியோ அல்லது மந்திர உச்சாடனங்கலையோஎதிர் பார்ப்பது இல்லை.
இவைஎல்லாமே நம் பயத்தாலும் அறியாமையாலும் விளைந்தவை. சில சித்தர்களின் பாசுரங்கள் அன்பு மிகுதியால் விளைந்தவை. நம் தாயான உயிரிடம் நாம் உரிமையோடும் தூய அன்போடும் பழகினால் போதுமானது. அன்பை விட உரிமை முதன்மையானது. நமக்கு முக்திஎன்பதும் பிறப்புரிமை.
உயிர் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்பை மட்டும் தான்.
அடுத்ததாக தான் படைத்த நான் என்று நாம் சொல்லி கொள்ளும் நம் ஊன் சரீரத்தை தனக்கு இரையாக நைவேத்தியமாக எதிர்பார்க்கிறது.
நம் சரீரத்துள் ஆழ்ந்த நிர்விகல்ப நிலையில் இருக்கும் உயிரின் நிலைக்கு, அதாவது மனம் அற்ற, ஆதிக்கு சமமான, சமாதி நிலைக்கு நாம்சென்றால் தான் உயிராக இயலும்.
அப்போது சரீரத்தை உயிர் தனக்கு இரையாக்கி கொள்ளும். பின்அங்கே நாம் ஒளி வடிவாக விளங்கிடலாம்.. இது சித்தர்கள் கண்ட பூரண பொக்கிஷத்தில்உணர்ந்தது.
உயிருடன் வாழும் காலத்தில் கூட உயிருடன் உறவாகி உயிராகி உயிரோடு வாழத் தெரியாத வாழா வெட்டிகளுக்கு மரணம் என்பது மகத்தான உண்மை. ஆனால் உயிருடன் உறவு கொண்டு உறுதியாக உயிருடன் இருப்பவர்களுக்கு எப்படி மரணம் ஏற்ப்படும்.
உயிரை விட்டு நிற்கும் கடவுள் உலகெங்கும் இல்லை. கடவுளை விட்டு உயிர் தனித்தும் இல்லை.
போகனின் வாக்கு...
போகரின் சம்மதம் உயிராலயம் உலகுக்காக, உங்களுக்காக......
உயிரே கடவுள்...
Comments
Post a Comment