Skip to main content

உயிர் என்னும் கடவுள் உன்னிடம் எதிர்பார்ப்பது என்ன?

உயிர் என்னும் கடவுள் உன்னிடம் எதிர்பார்ப்பது என்ன?

நம்முள் இருந்துகொண்டு நம்மை விசுவாசிக்கும் உயிரின் விசுவாசமே நம் சுவாசம்.

         அப்படியிருக்க நம் உயிரை நாம் விசுவாசிக்க மறந்து, உணர்ச்சிகள் அற்ற ஜடப் பொருட்களின் மேல் பக்தியும் பேராசையும்  கொள்தல் மஹா பாபம் இல்லையா. 

       சிந்தியுங்கள் உங்களை படைத்து உங்களுக்குள் இருந்து உங்களை அசைக்கும் உயிர் ஒன்றே உங்களுக்கு சொந்தமானது, கண்களால் காணும் அத்தனையும் கானல் நீர் போல் மாயையானது ....


எந்த தாயும் தன குழந்தைகளிடம் உடலை வருத்தி  வேண்டுதலோ, பயமோ, பக்தியோ அல்லது மந்திர உச்சாடனங்கலையோஎதிர் பார்ப்பது இல்லை.

      இவைஎல்லாமே நம் பயத்தாலும்  அறியாமையாலும் விளைந்தவை. சில சித்தர்களின் பாசுரங்கள் அன்பு மிகுதியால் விளைந்தவை. நம் தாயான உயிரிடம்  நாம் உரிமையோடும் தூய அன்போடும் பழகினால் போதுமானது. அன்பை விட உரிமை முதன்மையானது. நமக்கு முக்திஎன்பதும் பிறப்புரிமை.

         உயிர் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்பை மட்டும் தான்.

   அடுத்ததாக தான் படைத்த நான் என்று நாம் சொல்லி கொள்ளும் நம் ஊன் சரீரத்தை தனக்கு இரையாக நைவேத்தியமாக   எதிர்பார்க்கிறது.

     நம் சரீரத்துள்  ஆழ்ந்த நிர்விகல்ப  நிலையில் இருக்கும் உயிரின் நிலைக்கு,  அதாவது மனம் அற்ற, ஆதிக்கு சமமான, சமாதி நிலைக்கு நாம்சென்றால் தான் உயிராக இயலும்.

      அப்போது சரீரத்தை உயிர் தனக்கு இரையாக்கி கொள்ளும். பின்அங்கே  நாம் ஒளி வடிவாக விளங்கிடலாம்.. இது சித்தர்கள் கண்ட பூரண பொக்கிஷத்தில்உணர்ந்தது.

உயிருடன் வாழும் காலத்தில் கூட உயிருடன் உறவாகி உயிராகி உயிரோடு வாழத் தெரியாத வாழா வெட்டிகளுக்கு மரணம் என்பது மகத்தான உண்மை.  ஆனால் உயிருடன் உறவு கொண்டு உறுதியாக உயிருடன் இருப்பவர்களுக்கு எப்படி மரணம் ஏற்ப்படும்.

உயிரை விட்டு நிற்கும் கடவுள் உலகெங்கும் இல்லை. கடவுளை விட்டு உயிர் தனித்தும் இல்லை.

போகனின் வாக்கு...

போகரின் சம்மதம் உயிராலயம்  உலகுக்காக, உங்களுக்காக......

உயிரே கடவுள்...

Comments

Popular posts from this blog

ஸ்படிகமாலை

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன  நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.  அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிகப் பாறைகள்  ஆறு மற்றும் ஏழு  பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. ஸ்படிகமாலை கோர்க்கும்முறை  ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாத...

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்?

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? கேள்வி - உண்மையான பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? பக்தனுக்கு சோதனை தராமல் அருள் செய்யும் கடவுளே இல்லையா?    இராம் மனோகர் - ஒருவரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லிக் கடன் வாங்கிச் செலுத்திக் கொண்டே வருகிறோம். வட்டியைத்தான் செலுத்த முடிகிறதே தவிர, கடன் அடைந்த பாடில்லை. குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி அதை, இதை விற்றாவது முழுக் கடனையும் அடைத்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறோம். நகை நட்டு, நிலபுலன்கள் என்று அனைத்தையும் விற்றுக் கடனை அடைத்து விட்டு அமைதியடைகிறோம். மொத்த கடனையும் அடைக்க வேண்டும் எனும் பொழுது மிகுந்த சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனினும் கடனை அடைத்து விட்டால் பெரிய நிம்மதி வந்து விடுகிறது. அது போலத்தான் உண்மையான பக்தன் நிலையும் இருக்கிறது. மாதா மாதம் வட்டி செலுத்துவது போல, வினைகளை அனுபவிப்பதும், மேலும் வினைகளைப் பெருக்கிக் கொள்வதும் சராசரி மனிதனின் நிலையாக இருக்கிறது. ஆனால், பக்தன் அவ்வாறு அல்லவே ? அவன் மொத்த வினைகளையும் வேரறுக்க நினைக்கிறான். இந்தப் பிறவியிலேயே வின...

தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர் தென்னிந்திய இராஜபுத்திரர்கள்

பிறந்தசாதி பெருமையை அறிவோம். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥வன்னியர் மட்டுமே சத்ரியர். அரசு ஆணை எண் .271. நாள்.13.6.1929.ல் வெளியீடு . 🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥 🔥தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர். தென்னிந்திய இராஜபுத்திரர்கள். 🔥தமிழ்நாட்டில், "வன்னிய குல சத்ரியர்" 🔥ஆந்திராவில், "அக்னி குல சத்ரியர் " 🔥கேரளாவில், "சம்பு குல சத்திரியர்" 🔥கர்நாடாகாவில், "திகளர் குல சத்ரியர்"  🔥என தென்னிந்தியா முழுவதும், அரசாணை வழங்கப்பட்டது. 🔥கி.பி1886.இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல சத்ரிய" மஹா சங்கம், மதராஸ் பிரசிடென்சியில், 🔥 மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது. 🔥வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்" எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து  🔥வன்னியர்கள் "சத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள். 🔥பின்பு நாங்களும் சத்ரியர்தான் என்...