ஆலயம் தொழுவது சாலவும் நன்று?

உயிர் எனும் உண்மை கடவுள் வாழும் உண்மை ஆலயம் நம் சரீரம் மட்டுமே. நிழல் விழாத கோபுரம் கூரை இல்லாத கோபுரம் நம்சரீரம்தான். ஒளி தேகம் எனும் நம் உண்மை தேகம் நம் சொரூப தேகம் சீவனாக சிவனாக கடவுளாக உறைவதை உணர வேண்டும். உன்னை மதிக்கவும் உன்னை வணங்கவும் பழகினால் உன்னை இந்த உலகமே வணங்கும்.
அதன் நிழல் தான் நம் இந்த ஊன் தேகம். அந்த சுத்த தேகம் நம் சரீரத்தை விட்டு விலகுவதையே மரணம் என்கிறோம். அந்த நிழல் விழாத தேகத்தின் தத்துவத்தில் நம்பாட்டன் கருவூறாரின்உபதேசத்தில் ராச ராச சோழனால் உருவாக்கப்பட்டதே நிழல் விழாத தஞ்சை பெரிய கோயில். உயிரைஉணராது முக்தி சாஸ்வதம் இல்லை.
மெய்ஞானம் உணராது, வெறும் வாயில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சித்திரையில் இது நடக்கும் மார்கழியில் அது நடக்கும்என கூறிதிரிவது ஞானத்துக்குஅழகல்ல.எல்லாம்இயற்க்கை எனும் உயிரின் விருப்பம். அவனன்றி ஓர்அணுவும் அசையாது. அஹம் பிரம்மாஸ்மி,
ஈடு இணை இல்லா உயிரே சரணம்.....
உங்களிடம் உள்ள மெய் பொருளை, உங்களுக்கு உருவம் கொடுத்து அழகு பார்க்கும் கரு பொருளை, உங்களை படைத்த உயிரை,மதிக்க கற்று கொள்ளுங்கள்.
படைத்தவனை மறந்து விட்டு, படைப்புகளை வணங்கும் அநீதி மறையட்டும்.படைத்தவனை அவமரியாதை செய்யும் கொடும் பாவ செயல் இனியும் வேண்டாம்.படைத்தவன் கோபம் கொண்டால் பூமியே பொசுங்கி போகும்.
படைத்தவனை விசுவாசியுங்கள்.உயிரே கடவுள் என அறியாதவரை நாம் செய்த பாபங்கள் மன்னிக்க படாது . உயிர்தான் கடவுள் என அறிந்த பின்னும் உயிரை அலட்ச்சியம் செய்தல் நன்மை பயக்காது. உயிருடன் இருக்க மரண பயம் போகும், நோய் போகும், கிரஹ தோஷம் போகும், வாழ்வியல் துன்பம் போகும், வானவர் தேச வழி காட்டும்,.கண் கண்ட கடவுள் உயிரே,
உயிர் ஏகமானவன்,ஈடு இணை அற்றவன், பிறப்பும் இறப்பும் இல்லாதவன், ஆதியானவன் , அனைத்துக்கும் மூலமானவன், எல்லாம் அவன் செயல். எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே. ஆணுமல்லாத பெண்ணுமல்லாத அரவானியே, நர வாகனனே...
உங்கள் உயிரை உங்கள் ஒருவருக்கு மட்டுமே சொந்தமான, கண் கண்ட மெய் கடவுளை, உங்களுக்குள் ஜோதி வடிவாக பிரதிஷ்டை செய்து, வணங்கி வந்தால், ஜோதி நிலை அடையலாம்..
உங்கள் அக ஜோதி முன் மண்டியிட்டு வணங்கி உங்கள் உடல் ரீதியான நோய், வாழ்வியல் துன்பங்களை முறையிடுங்கள். அவை யாவும் ஆதவனை கண்ட பனி போல் விலக காணலாம்.
உங்களோடு உயிர் உறவாடும் உண்மை காணலாம். பின் இந்த உலகியல் மாயை அனைத்தும் உங்களுக்கு வெறுத்து போகும், கடவுள் சுகம் மட்டுமே நாடும்,
உயிர் கவன வாழ்வு கொள்ளும் ஒருவருக்கு, மரண பயம் போகும், நோய் போகும், கிரஹ தோஷம் போகும், வாழ்வியல் துன்பம் போகும், வானவர் தேசம் வழி காட்டும்,.
கண் கண்ட கடவுள் உயிரே,
உயிரே சரணம். உயிரே கடவுள்........
Comments
Post a Comment