Skip to main content

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்-

வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருளால் ஆனவன்
1. உடல், 2.ஆவிஉடல்(சூட்சுமஉடல்) ,3.ஆன்மா
-
நாம் காணும் உடல் தூலசரீரம். மனம்,புத்தி,நான்-உணர்வால் ஆன லிங்க சரீரம் அதற்கு பின்னால் உள்ளது.அடுத்து ஆன்மா உள்ளது
-
பிரபஞ்சம் எந்த அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதே அமைப்பில்தான் அதன் ஒவ்வொரு பகுதியும் கட்டப்பட்டிருக்கும்
-
இந்த பொருள்களெல்லாம் எங்கிருந்து வந்தன?சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் வந்தது என்று கூறுவது தவறு.
-
இந்த பூமி குளிர்ந்துகொண்டே சென்று ஒரு காலத்தில் துண்டுதுண்டாக சிதறிவிடும்.மீண்டும் அந்த சிறதலிலிருந்து பூமி உருவாகும்
-
சூன்யத்திலிருந்து இந்த உலகம் படைக்கப்பட வில்லை. இறைவனிடமிருந்து வெளிப்பட்டது என்று சொல்வதுதான் சரி
-
உலகம் துவங்கிய காலத்தை நினைக்க தொடங்கினால்,அதற்கு முன் உள்ள காலத்தையும் நினைக்கவேண்டிவரும்.காலத்திற்கு துவக்கம் இல்லை
-
பிரபஞ்சத்தின் எல்லையை நினைக்க துவங்கினால் எல்லைக்கு அப்பால் உள்ளதையும் நினைக்க வேண்டிவரும்.அப்போது எல்லை பொருளற்றதாகி விடுகிறது
-
ஒரு பொருளை உருவாக்க சிறிது மூலப்பொருளும், உருவாக்குபவனின் சக்தியும்தேவை.சக்தி விலகிவிட்டால் அது அழிந்துவிடும்
-
ஆறு தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாலும்,ஆற்று நீர் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது.இவ்வாறே உலகத்தில் உள்ள அனைத்தும்
-
ஒருவன் முக்தி பெற்றதும் தூலவுடலும், ஆவி உடலும் மூலப்பொருட்களாகப் பிரிந்துவிடுகிறது.ஆனால் ஆன்மா அழிவற்றதாக இருக்கும்
-
எப்படி ஆன்மா உடலுக்கும் மனத்திற்கும் ஆன்மாவாக இருக்கிறதோ, அப்படியே அனைத்து ஆன்மாக்களுக்கும் ஆன்மாவாக இருப்பவர் இறைவன்
-
பல ஆன்மாக்களையும் இயற்கையையும் கொண்ட இந்த பிரபஞ்சம் இறைவனுக்கு உடல்போல் அமைகிறது.இது விசிஷ்டாத்வைதம்
-
மனிதன் கடவுளைக் காணும்போது தன்னிலிருந்து வேறுபட்டவராக அவரை காண்கிறான்.இது துவைத நிலை சாதாரண மதம்
-
பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள இந்த ஆன்மாக்களெல்லாம் இறைவனிடமிருந்து வந்துள்ளன.ஒவ்வோர் ஆன்மாவும் இறைவனின் ஓர் அம்சம்
-
இயற்கை முழுவதையும் எடுத்துக்கொண்டால் அதற்கு தொடக்கம் முடிவு இல்லை.ஆனால் அதற்குள் பலகோடி மாறுதல்கள் நடக்கின்றன
-
ஆன்மா எந்த மூலக்கூறுகளாலும் உருவாக்கப்படவில்லை. எனவே அதற்கு அழிவு இல்லை.தொடக்கம் முடிவு இரண்டும் இல்லை
-
மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீண்டும் மூலக்கூறுகளாக பிரிந்துவிடும்.இதற்கு பெயர்தான் அழிவு
-
ஒரு பொருள் தன் மூலக்கூறுகளாக பிரிவதையே அழிவு என்கிறோம்.டம்ளரை பொடியாக்கினால் அதன் மூலக்கூறுகளாகிவிடும் அழியாது
-
இறைவன் ஒரு காலத்தில் உலகை படைத்துவிட்டு ஓய்வில் உள்ளார் என்பது தவறு.அவரது படைப்பு எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறது
-
காலத்திற்கு தொடக்கம் இல்லை.அதேபோல் இடம்(விண்வெளி) என்பதற்கும் தொடக்கம் இல்லை.இரண்டிற்கும் முடிவும் இல்லை
-
முதன்முதலாக படைப்பு எப்படி எங்கே இருந்தது?இந்த கேள்வியே தவறு.முதல் என்ற ஒன்று இல்லவே இல்லை. தொடக்கம் முடிவு இல்லை
-
பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியவர் இறைவன்.அது அவரது மூச்சின் வழியே வெளிவருவதுபோல் உள்ளது.மறுபடியும் அவருள்ளேயே ஒடுங்குகிறது
-
உலகிலுள்ள எந்த பொருளுக்கும் அழிவு என்பது இல்லை.ஜடப்பொருளின் ஓர் அணுவைக்கூட நம்மால் அழிக்க முடியாது
-
உலகிலுள்ள சக்தியின் மொத்த அளவு எப்போதும் ஒன்றுதான்.சக்தியின் அளவை நம்மால் கூட்டவும் முடியாது,அழிக்கவும் முடியாது
-
சூன்யத்திலிருந்து எதையுமே படைக்க முடியாது.அது போல் இருக்கும் எதையுமே இல்லாமல் செய்யவும் முடியாது
-
இந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதியில் என்ன இருக்குமோ அது பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் என்பதை காணலாம்
-
மனம்,புத்தி,நான்-உணர்வு இவைகளால் ஆக்கப்பட்ட சூட்சும சரீரம் பல யுகங்களானாலும் அழியாமல் இருக்கும்

Comments

Popular posts from this blog

ஸ்படிகமாலை

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன  நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.  அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிகப் பாறைகள்  ஆறு மற்றும் ஏழு  பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. ஸ்படிகமாலை கோர்க்கும்முறை  ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாத...

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்?

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? கேள்வி - உண்மையான பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? பக்தனுக்கு சோதனை தராமல் அருள் செய்யும் கடவுளே இல்லையா?    இராம் மனோகர் - ஒருவரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லிக் கடன் வாங்கிச் செலுத்திக் கொண்டே வருகிறோம். வட்டியைத்தான் செலுத்த முடிகிறதே தவிர, கடன் அடைந்த பாடில்லை. குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி அதை, இதை விற்றாவது முழுக் கடனையும் அடைத்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறோம். நகை நட்டு, நிலபுலன்கள் என்று அனைத்தையும் விற்றுக் கடனை அடைத்து விட்டு அமைதியடைகிறோம். மொத்த கடனையும் அடைக்க வேண்டும் எனும் பொழுது மிகுந்த சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனினும் கடனை அடைத்து விட்டால் பெரிய நிம்மதி வந்து விடுகிறது. அது போலத்தான் உண்மையான பக்தன் நிலையும் இருக்கிறது. மாதா மாதம் வட்டி செலுத்துவது போல, வினைகளை அனுபவிப்பதும், மேலும் வினைகளைப் பெருக்கிக் கொள்வதும் சராசரி மனிதனின் நிலையாக இருக்கிறது. ஆனால், பக்தன் அவ்வாறு அல்லவே ? அவன் மொத்த வினைகளையும் வேரறுக்க நினைக்கிறான். இந்தப் பிறவியிலேயே வின...

தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர் தென்னிந்திய இராஜபுத்திரர்கள்

பிறந்தசாதி பெருமையை அறிவோம். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥வன்னியர் மட்டுமே சத்ரியர். அரசு ஆணை எண் .271. நாள்.13.6.1929.ல் வெளியீடு . 🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥 🔥தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர். தென்னிந்திய இராஜபுத்திரர்கள். 🔥தமிழ்நாட்டில், "வன்னிய குல சத்ரியர்" 🔥ஆந்திராவில், "அக்னி குல சத்ரியர் " 🔥கேரளாவில், "சம்பு குல சத்திரியர்" 🔥கர்நாடாகாவில், "திகளர் குல சத்ரியர்"  🔥என தென்னிந்தியா முழுவதும், அரசாணை வழங்கப்பட்டது. 🔥கி.பி1886.இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல சத்ரிய" மஹா சங்கம், மதராஸ் பிரசிடென்சியில், 🔥 மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது. 🔥வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்" எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து  🔥வன்னியர்கள் "சத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள். 🔥பின்பு நாங்களும் சத்ரியர்தான் என்...