Skip to main content

மனம் இறக்கும் கலை

மனம் இறக்கும் கலை


தினமும் குறைந்த பட்சம் ஒரு மணிநேரம்,

எங்காவது மெளனமாக உட்காருங்கள்

ஒரு நதிக்கோ, அல்லது ஒரு தோட்டத்திற்கோ,

எங்காவது, யாரும் உங்களை தொந்தரவு செய்யாத இடத்திற்கு செல்லுங்கள்

உடம்பை தளர்த்திக் கொள்ளுங்கள்

அதிக சிரமப்படாதீர்கள்,

மூடிய கண்களுடன் மனதிற்கு சொல்லுங்கள்,

இப்போது, ஆரம்பி

நீ என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாயோ,

அதைசெய்

நான் கவனிக்கிறேன்

நான் பார்க்கிறேன்

உங்களுக்கு வியப்பாக இருக்கும் 

சிலவினாடிகள் உங்கள் மனது வேலையே செய்யாமல் இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்

சில தருணங்கள் சிலசமயங்களில்

ஒரு வினாடி, மனம் வேலை செய்யாமல் இருப்பதை பார்ப்பீர்கள்,

யதார்த்த உணர்விருக்கும், எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கும் கற்பனை நிலை இல்லாதகணம்

ஆனால் அது ஒரு கணம்தான்,

மிகசிறிய தருணம்

பிறகு மனம் மறுபடியும் வேலைசெய்யத் துவங்கும்

மனம் வேலைசெய்யத் துவங்கும்போது,

சிந்தனைகள் ஓடத் துவங்கும்,

பிம்பங்கள் மிதக்கும்,

அதை உடனடியாக உணரமாட்டீர்கள்

பிறகுதான், சிலநிமிடங்கள் கழித்து,

மனம் வேலைசெய்யத் துவங்கிவிட்டதை உணர்வீர்கள்,

நீங்கள் உங்கள் வழியை தொலைத்துவிட்டிர்கள்

பிறகு மீண்டும் உங்கள் கவனத்திற்கு வாருங்கள்,

மனதிடம் சொல்லுங்கள்

"இப்போது, மேலேசெல்,

நான் ஒரு சாட்சியாக இருக்கிறேன்,"

மறுபடியும் மனம் ஒருவினாடி அப்படியே நிற்கும்

அந்த வினாடிகள் என்பது மிகவும் மதிப்பானது

அதுதான் யதார்த்தத்தின் முதல் தருணங்கள்

யதார்த்தத்தின் முதல் தோற்றம்,

முதல் ஜன்னல்

அவை மிகவும் சிறியவை,

சின்ன இடைவெளிகள்,

அவை வரும்போகும்,

ஆனால்

அந்த தருணங்களில் யதார்த்தத்தின் ருசியை உணரத் துவங்குவீர்கள்

மெதுவாக, மெதுவாக, போகப்போக,

அந்த இடைவெளி பெரிதாகிக்கொண்டே போவதை பார்ப்பீர்கள்

நீங்கள் அசாத்திய கவனமாக இருந்தால் மட்டுமே அது நடக்கும்

நீங்கள் அசாத்திய கவனத்தோடு இருக்கும்போது

மனம் செயல்படுவதில்லை

காரணம் அந்த கவனம் என்பதே இருட்டறையில் விளக்குமாதிரி செயல்படும்

அந்த விளக்கு இருக்கும்போது,

இருள் அங்கே இல்லை

நீங்கள் அங்கே இருக்கும்போது,

மனம் என்பது காணாமல் போகிறது 

நீங்கள் இருக்கிறீர்கள் மனம் காணவில்லை

நீங்கள் இல்லாதபோது,

மனம் செயல்படத்துவங்குகிறது 

நீங்கள் இல்லாதபோதுதான் மனம் அங்கே இருக்கிறது.

ஓஷோ

Comments

Popular posts from this blog

ஸ்படிகமாலை

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன  நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.  அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிகப் பாறைகள்  ஆறு மற்றும் ஏழு  பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. ஸ்படிகமாலை கோர்க்கும்முறை  ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாத...

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்?

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? கேள்வி - உண்மையான பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? பக்தனுக்கு சோதனை தராமல் அருள் செய்யும் கடவுளே இல்லையா?    இராம் மனோகர் - ஒருவரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லிக் கடன் வாங்கிச் செலுத்திக் கொண்டே வருகிறோம். வட்டியைத்தான் செலுத்த முடிகிறதே தவிர, கடன் அடைந்த பாடில்லை. குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி அதை, இதை விற்றாவது முழுக் கடனையும் அடைத்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறோம். நகை நட்டு, நிலபுலன்கள் என்று அனைத்தையும் விற்றுக் கடனை அடைத்து விட்டு அமைதியடைகிறோம். மொத்த கடனையும் அடைக்க வேண்டும் எனும் பொழுது மிகுந்த சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனினும் கடனை அடைத்து விட்டால் பெரிய நிம்மதி வந்து விடுகிறது. அது போலத்தான் உண்மையான பக்தன் நிலையும் இருக்கிறது. மாதா மாதம் வட்டி செலுத்துவது போல, வினைகளை அனுபவிப்பதும், மேலும் வினைகளைப் பெருக்கிக் கொள்வதும் சராசரி மனிதனின் நிலையாக இருக்கிறது. ஆனால், பக்தன் அவ்வாறு அல்லவே ? அவன் மொத்த வினைகளையும் வேரறுக்க நினைக்கிறான். இந்தப் பிறவியிலேயே வின...

தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர் தென்னிந்திய இராஜபுத்திரர்கள்

பிறந்தசாதி பெருமையை அறிவோம். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥வன்னியர் மட்டுமே சத்ரியர். அரசு ஆணை எண் .271. நாள்.13.6.1929.ல் வெளியீடு . 🔥🔥🔥🔥🙏🏻🔥🔥🔥🔥 🔥தென்னிந்தியாவில் வன்னியரே சத்ரியர். தென்னிந்திய இராஜபுத்திரர்கள். 🔥தமிழ்நாட்டில், "வன்னிய குல சத்ரியர்" 🔥ஆந்திராவில், "அக்னி குல சத்ரியர் " 🔥கேரளாவில், "சம்பு குல சத்திரியர்" 🔥கர்நாடாகாவில், "திகளர் குல சத்ரியர்"  🔥என தென்னிந்தியா முழுவதும், அரசாணை வழங்கப்பட்டது. 🔥கி.பி1886.இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல சத்ரிய" மஹா சங்கம், மதராஸ் பிரசிடென்சியில், 🔥 மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது. 🔥வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்" எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து  🔥வன்னியர்கள் "சத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள். 🔥பின்பு நாங்களும் சத்ரியர்தான் என்...