மனம் இறக்கும் கலை
தினமும் குறைந்த பட்சம் ஒரு மணிநேரம்,
எங்காவது மெளனமாக உட்காருங்கள்
ஒரு நதிக்கோ, அல்லது ஒரு தோட்டத்திற்கோ,
எங்காவது, யாரும் உங்களை தொந்தரவு செய்யாத இடத்திற்கு செல்லுங்கள்
உடம்பை தளர்த்திக் கொள்ளுங்கள்
அதிக சிரமப்படாதீர்கள்,
மூடிய கண்களுடன் மனதிற்கு சொல்லுங்கள்,
இப்போது, ஆரம்பி
நீ என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாயோ,
அதைசெய்
நான் கவனிக்கிறேன்
நான் பார்க்கிறேன்
உங்களுக்கு வியப்பாக இருக்கும்
சிலவினாடிகள் உங்கள் மனது வேலையே செய்யாமல் இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்
சில தருணங்கள் சிலசமயங்களில்
ஒரு வினாடி, மனம் வேலை செய்யாமல் இருப்பதை பார்ப்பீர்கள்,
யதார்த்த உணர்விருக்கும், எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கும் கற்பனை நிலை இல்லாதகணம்
ஆனால் அது ஒரு கணம்தான்,
மிகசிறிய தருணம்
பிறகு மனம் மறுபடியும் வேலைசெய்யத் துவங்கும்
மனம் வேலைசெய்யத் துவங்கும்போது,
சிந்தனைகள் ஓடத் துவங்கும்,
பிம்பங்கள் மிதக்கும்,
அதை உடனடியாக உணரமாட்டீர்கள்
பிறகுதான், சிலநிமிடங்கள் கழித்து,
மனம் வேலைசெய்யத் துவங்கிவிட்டதை உணர்வீர்கள்,
நீங்கள் உங்கள் வழியை தொலைத்துவிட்டிர்கள்
பிறகு மீண்டும் உங்கள் கவனத்திற்கு வாருங்கள்,
மனதிடம் சொல்லுங்கள்
"இப்போது, மேலேசெல்,
நான் ஒரு சாட்சியாக இருக்கிறேன்,"
மறுபடியும் மனம் ஒருவினாடி அப்படியே நிற்கும்
அந்த வினாடிகள் என்பது மிகவும் மதிப்பானது
அதுதான் யதார்த்தத்தின் முதல் தருணங்கள்
யதார்த்தத்தின் முதல் தோற்றம்,
முதல் ஜன்னல்
அவை மிகவும் சிறியவை,
சின்ன இடைவெளிகள்,
அவை வரும்போகும்,
ஆனால்
அந்த தருணங்களில் யதார்த்தத்தின் ருசியை உணரத் துவங்குவீர்கள்
மெதுவாக, மெதுவாக, போகப்போக,
அந்த இடைவெளி பெரிதாகிக்கொண்டே போவதை பார்ப்பீர்கள்
நீங்கள் அசாத்திய கவனமாக இருந்தால் மட்டுமே அது நடக்கும்
நீங்கள் அசாத்திய கவனத்தோடு இருக்கும்போது
மனம் செயல்படுவதில்லை
காரணம் அந்த கவனம் என்பதே இருட்டறையில் விளக்குமாதிரி செயல்படும்
அந்த விளக்கு இருக்கும்போது,
இருள் அங்கே இல்லை
நீங்கள் அங்கே இருக்கும்போது,
மனம் என்பது காணாமல் போகிறது
நீங்கள் இருக்கிறீர்கள் மனம் காணவில்லை
நீங்கள் இல்லாதபோது,
மனம் செயல்படத்துவங்குகிறது
நீங்கள் இல்லாதபோதுதான் மனம் அங்கே இருக்கிறது.
ஓஷோ
Comments
Post a Comment