ஆசை என்பது ஒருவகைநோய்.
அந்த நோய்க்கு மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. மருந்து இல்லாத நோய் வந்தால் மரணம் ஒன்று தான் முடிவு...
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.
அருணகிரிநாதர்
துன்பம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஆசை வேண்டாம் என்று இருக்க வேண்டும். ஆசை இருந்தால் அதன் மூலம் மேலும் மேலும் துன்பம் வந்து கொண்டே இருக்கும் என்பார் வள்ளுவர்.
அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்
அஃது உண்டேல்,
தவாஅது மேன்மேல் வரும்.
ஒரு பக்கம் ஆசை என்னும் நோய்.
இன்னொரு பக்கம் ஆணவம் - ஈசன் முதல் மனிதர் வரை எல்லோரும் அஞ்சும்படி மூவுலகையும் ஆண்டேன் என்ற ஆணவம்.
இன்னொரு பக்கம் பயம் - புகழுக்கு பங்கம் வந்து விடுமோ, உயிர் போய் விடுமோ என்ற பயம். ஆண்மை என்பது மூன்று உலகையும் ஆள்வது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் மனிதன்..
பிறன் மனை நோக்காதது பேராண்மை என்று அவன் அறியவில்லை.
இராவணனுக்கு வந்ததை கம்பர் நமக்குக் காட்டுகிறார். ஆழ்ந்து சிந்தித்தால் வாழ்வின் தத்துவங்கள் விளங்கும்.
ஓம் நமசிவாய
அந்த நோய்க்கு மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. மருந்து இல்லாத நோய் வந்தால் மரணம் ஒன்று தான் முடிவு...
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.
அருணகிரிநாதர்
துன்பம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஆசை வேண்டாம் என்று இருக்க வேண்டும். ஆசை இருந்தால் அதன் மூலம் மேலும் மேலும் துன்பம் வந்து கொண்டே இருக்கும் என்பார் வள்ளுவர்.
அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்
அஃது உண்டேல்,
தவாஅது மேன்மேல் வரும்.
ஒரு பக்கம் ஆசை என்னும் நோய்.
இன்னொரு பக்கம் ஆணவம் - ஈசன் முதல் மனிதர் வரை எல்லோரும் அஞ்சும்படி மூவுலகையும் ஆண்டேன் என்ற ஆணவம்.
இன்னொரு பக்கம் பயம் - புகழுக்கு பங்கம் வந்து விடுமோ, உயிர் போய் விடுமோ என்ற பயம். ஆண்மை என்பது மூன்று உலகையும் ஆள்வது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் மனிதன்..
பிறன் மனை நோக்காதது பேராண்மை என்று அவன் அறியவில்லை.
இராவணனுக்கு வந்ததை கம்பர் நமக்குக் காட்டுகிறார். ஆழ்ந்து சிந்தித்தால் வாழ்வின் தத்துவங்கள் விளங்கும்.
ஓம் நமசிவாய
Comments
Post a Comment