Skip to main content

Posts

Showing posts from May, 2018

ஞானப்பசி: கோத்திரம்

ஞானப்பசி: கோத்திரம் : கோத்திரம் (Gotram).. கோத்திரம் என்றால் என்ன?..... ஓர் சிறப்பு கண்ணோட்டம்..... அன்புடன் NTN ஜோதிட நிலையம் SPBS சுந்தரமூர்த்தி கந்...
ஆசை என்பது ஒருவகைநோய். அந்த நோய்க்கு மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. மருந்து இல்லாத நோய் வந்தால் மரணம் ஒன்று தான் முடிவு... பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? வீரா, முது சூர் பட வேல் எறியும் சூரா, சுர லோக துரந்தரனே.              அருணகிரிநாதர் துன்பம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஆசை வேண்டாம் என்று இருக்க வேண்டும். ஆசை இருந்தால் அதன் மூலம் மேலும் மேலும் துன்பம் வந்து கொண்டே இருக்கும் என்பார்  வள்ளுவர். அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃது உண்டேல், தவாஅது மேன்மேல் வரும். ஒரு பக்கம் ஆசை என்னும் நோய். இன்னொரு பக்கம் ஆணவம் - ஈசன் முதல் மனிதர் வரை எல்லோரும் அஞ்சும்படி  மூவுலகையும் ஆண்டேன் என்ற ஆணவம். இன்னொரு பக்கம் பயம் - புகழுக்கு பங்கம் வந்து விடுமோ, உயிர் போய் விடுமோ என்ற பயம். ஆண்மை என்பது மூன்று உலகையும் ஆள்வது  என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் மனிதன்.. பிறன் மனை நோக்காதது பேராண்மை என்று அவன் அறியவில்லை. இராவணனுக்கு வந்ததை கம்பர் நமக்குக்  காட்டுகிறார். ஆழ்ந்து சிந்தித்தால் வாழ...

!!பரிசுத்தமான பக்தியை அடையாளம் காட்டிய பரமாசார்யா!!

!!பரிசுத்தமான பக்தியை அடையாளம் காட்டிய பரமாசார்யா!! மகாபெரியவாளின் பக்தர்களாகிய ஒரு தம்பதியர், ஆசார்யாளை தரிசனம்  செய்ய ஸ்ரீமடத்துக்குச் செல்ல தீர்மானித்தனர். மகானுக்காக நீண்டதொரு எலுமிச்சம் பழம் மாலையைக் கோத்து எடுத்துக்கொண்டு போகலாம் என்று நினைத்த அவர்கள், அதற்காக 108 எலுமிச்சம் பழங்களை நல்லதாகப் பார்த்து பொறுக்கி எடுத்து வாங்கி வந்தார்கள். அந்தப் பழங்களை நீளமாக நல்ல நூலில் மாலையாகக் கோக்கும் வேலையை தங்கள் வீட்டு சமையல்கார மாமியிடம் ஒப்படைத்தார்கள். தான் கோக்கும் எலுமிச்சை மாலை மகாபெரியவளின் கழுத்தை அலங்கரிக்கப் போகிறது என்பதை அறிந்த அந்த மாமி, மிகவும் பக்தி சிரத்தையோடு ஒவ்வொரு பழமாக எடுத்து "ஓம் நமசிவாய.....ஓம் நமசிவாய.." என்று சொன்னபடி நூலில் கோத்து முடித்தார். மாலை மிகவும் நேர்த்தியாகத் தயாரானவுடன், அதையும் கனிவர்க்கம் புஷ்பம் என்று மேலும் சிலவற்றையும் எடுத்துக்கொண்டு, அந்தத் தம்பதியர், ஆசார்யாளைப் பார்க்கப் போனார்கள். அவர்களுடைய அதிரிஷ்டமோ என்னவோ அன்று கொஞ்சம் கூட்டம் குறைவாகவே இருந்ததில் எளிதில் தரிசனம் கிடைக்க, எல்லா திரவியங்களுடன் எலுமிச்சை மாலையையும் பக...

மனிதன்-கடவுள்

ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...! அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்...! கடவுள் : " வா மகனே...! நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது...! " மனிதன் : " இப்பவேவா ? இவ்வளவு சீக்கிரமாகவா ? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது ? "  கடவுள் : " மன்னித்துவிடு மகனே...! உன்னை கொண்டு செல்வதற்கான நேரம் இது...! " மனிதன் : " அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? " கடவுள் : " உன்னுடைய உடைமைகள்...! " மனிதன் : " என்னுடைய உடைமைகளா...! என்னுடைய பொருட்கள், உடைகள், பணம் எல்லாமே இதில்தான் இருக்கின்றனவா ? " கடவுள் : " நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல.. அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது...! " மனிதன் : " அப்படியானால் என்னுடைய நினைவுகளா ? " கடவுள் : " அவை காலத்தின் கோலம்...! " மனிதன் : " என்னுடைய திறமைகளா ? " கடவுள் : " அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...! " மனிதன் : " அப்படியென்றால் என்னுடைய குடும்...

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... : 1. எது இதமானது ? தர்மம். 2. நஞ்சு எது ? பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது. 3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ? பற்றுதல். 4. கள்வர்கள் யார் ? புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள். 5. எதிரி யார் ? சோம்பல். 6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ? இறப்புக்கு. 7. குருடனை விட குருடன் யார் ? ஆசைகள் அதிகம் உள்ளவன். 8. சூரன் யார் ? கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன். 9.மதிப்புக்கு மூலம் எது ? எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது. 10. எது துக்கம் ? மன நிறைவு இல்லாமல் இருப்பது. 11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ? குற்றங்கள் புரியாமல் வாழ்வதை. 12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ? இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை. 13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ? நல்லவர்கள். 14. எது சுகமானது ? அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது. 15. எது இன்பம் தரும் ? நல்ல மனதுடையோர்களின...

ஸ்படிகமாலை

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன  நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.  அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிகப் பாறைகள்  ஆறு மற்றும் ஏழு  பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. ஸ்படிகமாலை கோர்க்கும்முறை  ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாத...

முன்ஜென்மம் உண்மையா?

நமக்கு ஏன் முற்பிறவி நினைவு வருவதில்லை? முன்ஜென்மம் உண்மையா? -- 1.நாம் குழந்தைகளாக இருந்தபோது என்ன நடந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது.? - 2.நினைவு தான் ஆதாரம் என்றால் நம் நினைவில் இல்லாத நாட்கள் நாம் வாழாத நாட்கள் என்று ஆகிவிடும். சிலர் ஹோமாவிற்கு சென்றுவிடுகிறார்கள்.எதுவும் நினைவில் இருப்பதில்லை .அவர்கள் நினைவில் இல்லாத காலங்கள் அவர் வாழாத காலம் என்று சொல்ல முடியுமா? - 3.முற்பிறவியில் உள்ள மூளை அழிந்து விட்டது.இப்போது உள்ளது புதிய மூளை.ஒருவன் புதிய மூளையுடன் தான் மறுபிறவி எடுக்கிறான். - 4.ஆனாலும் சிலருக்கு முற்பிறவி நினைவு வருகிறது.இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. எந்த பிறவியில் ஒருவன் முக்தனாக ஆவானோ அந்த பிறவியில் ஒருவனுக்கு முற்பிறவி நியாபகம் வருகிறது.(நமது முற்பிறவியை நியாபகப்படுத்திகூறும் மனோவியல் மருத்துவர்களும் இருக்கிறார்கள்) - 5.ஒரே பெற்றோருக்கு பிறக்கும் இரட்டைக்குழந்தையில் ஒன்றிற்கு அதிக அறிவு உள்ளது.இன்னொன்றிற்கு குறைவாக உள்ளது.இரண்டுபேரும் ஒரே போல் வளர்க்கப்ட்டலாலும்,சிறுவயதிலேயே வேறுபாடு இருப்பதை நாம் காண்முடியும். அறிவை வளர்த்துக்கொள்வத...

மனம் இறக்கும் கலை

மனம் இறக்கும் கலை தினமும் குறைந்த பட்சம் ஒரு மணிநேரம், எங்காவது மெளனமாக உட்காருங்கள் ஒரு நதிக்கோ, அல்லது ஒரு தோட்டத்திற்கோ, எங்காவது, யாரும் உங்களை தொந்தரவு செய்யாத இடத்திற்கு செல்லுங்கள் உடம்பை தளர்த்திக் கொள்ளுங்கள் அதிக சிரமப்படாதீர்கள், மூடிய கண்களுடன் மனதிற்கு சொல்லுங்கள், இப்போது, ஆரம்பி நீ என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாயோ, அதைசெய் நான் கவனிக்கிறேன் நான் பார்க்கிறேன் உங்களுக்கு வியப்பாக இருக்கும்  சிலவினாடிகள் உங்கள் மனது வேலையே செய்யாமல் இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள் சில தருணங்கள் சிலசமயங்களில் ஒரு வினாடி, மனம் வேலை செய்யாமல் இருப்பதை பார்ப்பீர்கள், யதார்த்த உணர்விருக்கும், எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கும் கற்பனை நிலை இல்லாதகணம் ஆனால் அது ஒரு கணம்தான், மிகசிறிய தருணம் பிறகு மனம் மறுபடியும் வேலைசெய்யத் துவங்கும் மனம் வேலைசெய்யத் துவங்கும்போது, சிந்தனைகள் ஓடத் துவங்கும், பிம்பங்கள் மிதக்கும், அதை உடனடியாக உணரமாட்டீர்கள் பிறகுதான், சிலநிமிடங்கள் கழித்து, மனம் வேலைசெய்யத் துவங்கிவிட்டதை உணர்வீர்கள், நீங்கள் உங்கள் வ...

வாழ்க்கை

"புரிதல் + விட்டுக் கொடுத்தல் = வாழ்க்கை" "நீண்ட தொலைவில் இருந்து இரண்டு குடம் தண்ணீர் எடுத்து வந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்து விட்டு, அடுத்த இரண்டு குடம் தண்ணீரை கொண்டு வர சென்று விட்டாள் மனைவி........ "அந்த நேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசி வேறு அவனுக்கு. "வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டி விட்டு விழுந்து விடுகிறான். இரண்டு குடம் தண்ணீரும் கொட்டி விடுகிறது. அவனுக்கு கடுமையான கோபம் வந்து விடுகிறது. கொஞ்சமாவது அறிவு வேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி. " தூக்கி வந்த குடத்தைக் கூட இறக்க விடாமல் அவளைத் திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்க வீட்டில எப்படித் தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்ற படி கண்ட படி திட்டுகிறான். இதைக் கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப் பட்டு எவ்வளவ...

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்?

பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? கேள்வி - உண்மையான பக்தனை கடவுள் சோதிப்பது ஏன்? பக்தனுக்கு சோதனை தராமல் அருள் செய்யும் கடவுளே இல்லையா?    இராம் மனோகர் - ஒருவரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறோம், மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லிக் கடன் வாங்கிச் செலுத்திக் கொண்டே வருகிறோம். வட்டியைத்தான் செலுத்த முடிகிறதே தவிர, கடன் அடைந்த பாடில்லை. குடும்பத்தில் அனைவரும் கலந்து பேசி அதை, இதை விற்றாவது முழுக் கடனையும் அடைத்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறோம். நகை நட்டு, நிலபுலன்கள் என்று அனைத்தையும் விற்றுக் கடனை அடைத்து விட்டு அமைதியடைகிறோம். மொத்த கடனையும் அடைக்க வேண்டும் எனும் பொழுது மிகுந்த சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனினும் கடனை அடைத்து விட்டால் பெரிய நிம்மதி வந்து விடுகிறது. அது போலத்தான் உண்மையான பக்தன் நிலையும் இருக்கிறது. மாதா மாதம் வட்டி செலுத்துவது போல, வினைகளை அனுபவிப்பதும், மேலும் வினைகளைப் பெருக்கிக் கொள்வதும் சராசரி மனிதனின் நிலையாக இருக்கிறது. ஆனால், பக்தன் அவ்வாறு அல்லவே ? அவன் மொத்த வினைகளையும் வேரறுக்க நினைக்கிறான். இந்தப் பிறவியிலேயே வின...

கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ்

கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் அர்ஜுனனை விட? அர்ஜுனன் ஒருநாள்.. கிருஷ்ணரிடம் கேட்டான்.....? தருமரை விட கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்? இரண்டு பேருமே எதையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர்கள்தானே...? கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் ?” சரி, என்னுடன் வா, காட்டுகிறேன் என்று கூறி அர்ஜுனனை அழைத்துச் சென்றார் கிருஷ்ணன். இருவரும் பிராமணர்களைப் போல வேடமிட்டுக்கொண்டு தருமரின் அவைக்குச் சென்றார்கள். யாகம் நடத்த சந்தனக் கட்டைகள் வேண்டும் என்றார்கள். மன்னர் தருமர் உடனே சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை நாடு முழுவதும் அனுப்பினார். ஆனால் அப்போது மழைக்காலம். கொண்டு வந்த மரங்கள் எல்லாம் ஈரமாகி இருந்தன. அவற்றைக்கொண்டு யாகம் நடத்த முடியாது. இருவரும் கர்ணனிடம் சென்று அதே கோரிக்கையை வைத்தார்கள். கர்ணன் யோசித்தான். “அடாடா... இது மழைக்காலம். இந்த மழைக்காலத்தில் காய்ந்த கட்டைகள் கிடைக்காது. அதனால் என்ன... கொஞ்சம் பொறுங்கள்” என்றான். கோடரியை எடுத்து வந்தான். மாளிகையின் கதவுகளும் சன்னல்களும் சந்தன மரத்தால் செய்யப்பட்டவை. கர்ணன் ...

ருத்ராட்ஷத்தின் – மகிமை- மஹா பெரியவர்

ருத்ராட்ஷத்தின் – மகிமை- மஹா பெரியவர் ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை; ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும் ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை. ருத்ராட்ஷத்தின் - மகிமை ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது? சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும் அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா? ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது. சிறுவர், சிறுமிய...

மண்ணுளிபாம்பு_மர்மம்

மண்ணுளிபாம்பு_மர்மம் மண்ணுளி பாம்பு மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப்பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும். #SANDBOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன. இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி புழு என்றழைப்போம். இந்த மண்ணுளி மிகுந்த கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுபாவம் கொண்டதாகும். இந்த பாம்பினால் மரணம் நிகழ்ந்ததாக இதுவரை எந்த பதிவும் இல்லை. திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது? இந்தக் கேள்விக்கான பதில் எங்கும் கிடைக்காது. ஏனெனில் இதற்கான உண்மையான பதில் திட்டமிட்டு மறைக்...