ஆலயம் தொழுவது சாலவும் நன்று? உயிர் எனும் உண்மை கடவுள் வாழும் உண்மை ஆலயம் நம் சரீரம் மட்டுமே. நிழல் விழாத கோபுரம் கூரை இல்லாத கோபுரம் நம்சரீரம்தான். ஒளி தேகம் எனும் நம் உண்மை தேகம் நம் சொரூப தேகம் சீவனாக சிவனாக கடவுளாக உறைவதை உணர வேண்டும். உன்னை மதிக்கவும் உன்னை வணங்கவும் பழகினால் உன்னை இந்த உலகமே வணங்கும். அதன் நிழல் தான் நம் இந்த ஊன் தேகம். அந்த சுத்த தேகம் நம் சரீரத்தை விட்டு விலகுவதையே மரணம் என்கிறோம். அந்த நிழல் விழாத தேகத்தின் தத்துவத்தில் நம்பாட்டன் கருவூறாரின்உபதேசத்தில் ராச ராச சோழனால் உருவாக்கப்பட்டதே நிழல் விழாத தஞ்சை பெரிய கோயில். உயிரைஉணராது முக்தி சாஸ்வதம் இல்லை. மெய்ஞானம் உணராது, வெறும் வாயில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சித்திரையில் இது நடக்கும் மார்கழியில் அது நடக்கும்என கூறிதிரிவது ஞானத்துக்குஅழகல்ல.எல்லாம்இயற்க்கை எனும் உயிரின் விருப்பம். அவனன்றி ஓர்அணுவும் அசையாது. அஹம் பிரம்மாஸ்மி, ஈடு இணை இல்லா உயிரே சரணம்..... உங்களிடம் உள்ள மெய் பொர...