Skip to main content

Posts

Showing posts from April, 2018

ஆலயம் தொழுவது சாலவும் நன்று?

ஆலயம் தொழுவது சாலவும் நன்று?      உயிர் எனும் உண்மை கடவுள் வாழும் உண்மை ஆலயம் நம் சரீரம் மட்டுமே.  நிழல் விழாத கோபுரம் கூரை இல்லாத கோபுரம் நம்சரீரம்தான். ஒளி தேகம் எனும் நம் உண்மை தேகம் நம் சொரூப தேகம் சீவனாக சிவனாக கடவுளாக உறைவதை உணர வேண்டும். உன்னை மதிக்கவும் உன்னை வணங்கவும் பழகினால் உன்னை இந்த உலகமே வணங்கும்.       அதன் நிழல் தான் நம் இந்த ஊன் தேகம்.  அந்த சுத்த தேகம் நம் சரீரத்தை விட்டு விலகுவதையே மரணம் என்கிறோம். அந்த நிழல் விழாத தேகத்தின் தத்துவத்தில் நம்பாட்டன் கருவூறாரின்உபதேசத்தில்  ராச ராச சோழனால் உருவாக்கப்பட்டதே நிழல் விழாத தஞ்சை பெரிய கோயில். உயிரைஉணராது முக்தி சாஸ்வதம் இல்லை.        மெய்ஞானம் உணராது, வெறும் வாயில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சித்திரையில் இது நடக்கும் மார்கழியில் அது நடக்கும்என கூறிதிரிவது ஞானத்துக்குஅழகல்ல.எல்லாம்இயற்க்கை எனும் உயிரின் விருப்பம். அவனன்றி ஓர்அணுவும் அசையாது. அஹம் பிரம்மாஸ்மி, ஈடு இணை இல்லா உயிரே சரணம்.....        உங்களிடம்  உள்ள மெய் பொர...

உயிர் என்னும் கடவுள் உன்னிடம் எதிர்பார்ப்பது என்ன?

உயிர் என்னும் கடவுள் உன்னிடம் எதிர்பார்ப்பது என்ன? நம்முள் இருந்துகொண்டு நம்மை விசுவாசிக்கும் உயிரின் விசுவாசமே நம் சுவாசம்.          அப்படியிருக்க நம் உயிரை நாம் விசுவாசிக்க மறந்து, உணர்ச்சிகள் அற்ற ஜடப் பொருட்களின் மேல் பக்தியும் பேராசையும்  கொள்தல் மஹா பாபம் இல்லையா.         சிந்தியுங்கள் உங்களை படைத்து உங்களுக்குள் இருந்து உங்களை அசைக்கும் உயிர் ஒன்றே உங்களுக்கு சொந்தமானது, கண்களால் காணும் அத்தனையும் கானல் நீர் போல் மாயையானது .... எந்த தாயும் தன குழந்தைகளிடம் உடலை வருத்தி  வேண்டுதலோ, பயமோ, பக்தியோ அல்லது மந்திர உச்சாடனங்கலையோஎதிர் பார்ப்பது இல்லை.       இவைஎல்லாமே நம் பயத்தாலும்  அறியாமையாலும் விளைந்தவை. சில சித்தர்களின் பாசுரங்கள் அன்பு மிகுதியால் விளைந்தவை. நம் தாயான உயிரிடம்  நாம் உரிமையோடும் தூய அன்போடும் பழகினால் போதுமானது. அன்பை விட உரிமை முதன்மையானது. நமக்கு முக்திஎன்பதும் பிறப்புரிமை.          உயிர் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்பை மட்டும் தான். ...

இல்லற இன்பம்

இல்லற இன்பம் ஒரு முறை கபீர்தாசரிடம் அவருடைய பக்தர் அறிவுரை கேட்க வந்திருந்தார். அவர் தயங்கித் தயங்கி கபீர்தாசரிடம், “எனக்கு இல்லற வாழ்க்கை இன்பமாக இல்லை! என்னுடைய மனைவியும் நானும் இன்பமாக குடும்பம் நடத்தவில்லை! எப்பொழுதும் சண்டைதான்! நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை! எதிர்த்துப் பேசறா… எரிஞ்சு விழறா… கோபப்படறா… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார்”. கபீர்தாசர் பார்த்தார். “சரி இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள்?”, யோசனை செய்து பதில் சொல்கிறேன்! என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய நூல் கண்டை எடுத்து கொண்டுவந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார். அந்த பெரிய நூல்கண்டு சிக்கலாயிருந்தது. அதனாலே கபீர்தாசர் அதில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுத்தார். நல்ல வெளிச்சமாகத்தான் இருந்தது. மனைவியிடம் விளக்கை எடுத்துக் கொண்டுவா என்றார். அந்த அம்மாவும் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டுவந்து அவர் பக்கத்திலே வைத்துவிட்டு உள்ளே போய்விட்டார்கள். “இவ்வளவு வெளிச்சத்தில் விளக்கு எதற்கு என்று எதுவும் கேட்கவில்லை”. சிறிது நேரம் கழித்து அந்த அம்மா இரண்டு டம்ளர் பாலைக் கொண்டு...

பிராமணம் சத்ரியம் வைசியம் சூத்திரம்

பிராமணம்.சத்ரியம் வைசியம் சூத்திரம் இதற்கு விளக்கம் கீழே உள்ளது பிராம்மணனாக மாறு ----- நான்கு ஜாதிகள் என்பது மனிதனின் வளர்சியில் நிகழும் நான்கு படிகளை பற்றி குறிப்பிடுகிறது. முதலில் வேலைக்காரனாக(சூத்திரன்) ஒரு மனிதன் தன் பயணத்தை தொடங்குகிறான்.பின்பு சுயதொழில் மூலம் (வைசியன்) முன்னேறுகிறான்.நன்றாக பணம் சம்பாதித்த பிறகு மக்களுக்கு உதவுவதற்காக அரசியலில் ஈடுபடுகிறான்(சத்திரியன்). மக்களை சிறப்பாக வழிநடத்தியபிறகு அனைத்தையும் விட்டுவிட்டு பிரம்மத்தை குறித்து தியானம் செய்கிறான்(பிராம்மணன்). இந்த நான்கு ஜாதிகளை பற்றிதான் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. - இவைகள் ஒவ்வொன்றையும் கடந்து மனிதன் கடைசியில் பிராம்மணனாக வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறக்க வேண்டும்.இதனால்தான் வேதங்கள் பிராம்மணன் உயர்ந்தவன் என்று கூறுகிறது.பிறப்பான் வருபவன் பிராமணன் அல்ல அவன் புரோகிதன்.அது மற்ற தொழில்களைபோல ஒரு தொழில்.புரோகிதன் ஒருவேளை சூத்திரனாக இருக்கலாம் அல்லது வைசியனாக இருக்கலாம்.பிராம்மணனாக இருக்க முடியாது.பிறப்பால் வரும் ஜாதி வேதத்திற்கு எதிரானது என்பதை வேதங்களே கூறுகின்றன.ஆகவே வேதத்தை பின்பற்றி வாழ்க்கையை...

ஓஷோ மருத்துவத்தில் இருந்து மனமற்ற நிலை வரை

ஞானோதயம் என்பது மனதிற்கு மேலே இருக்கிறது பைத்தியகாரத் தனம் என்பது மனதிற்கு கீழே விழுந்து விட்ட நிலை இரண்டுமே மனதிற்கு வெளியே இருக்கிற நிலை ஞானோதயம் என்பது உயர்ந்த நிலை ஆரோக்கியம் மருந்து(medicine) தியானம்(meditation) என்ற இரண்டு வார்த்தைகளும் ஒரே வேரிலிருந்து தோன்றியவை மருந்து உங்கள் உடல் ரீதியான நோய்களை குணப்படுத்துகிறது தியானம் உங்கள் ஆன்மீக இருத்தலில் குணப்படுத்துகிறது நீங்கள் மனதைக் கடந்தாலும் சந்தோஷம்தான் மனதிற்கு கீழே விழுந்தாலும் சந்தோஷம்தான் உங்களுடைய துயரம் வெறுப்பு கோபம் பேராசை பொறாமை இவைக ளுக்கு காரணம் உங்கள் மனம் தான் ஒரு ஞானோதயம் பெற்ற மனிதன் மனதை விட்டு வெளியேறி அந்த மனதை விழிப்புணர்வுடன் கவனிக்கிறான் நீங்கள் உங்கள் கோபத்தை நன்கு கவனித்தால் கோபம் மறைந்து விடும் ஞானோதயம் பெற்ற ஒரு மனிதன் எந்த தவறான விஷயங் களையும் விட வேண்டியது இல்லை அவனுடைய கவனிப்பால் அவை தாமாகவே போய் விடும் அவற்றால் விழிப்பை எதிர் கொள்ள முடியாது நீங்கள் எப்போதும் மனதைப் பற்றிய விழிப்போடு இருந்தால் நீங்கள் தவிர்க்க விரும்பும் விஷயங்கள் எல்லாம் ஆவியாகி விடும்

வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை

வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை..; #  நிறைய சகோதரர் சகோதரிகளுடன் பிறப்பது.. மற்றும் கடைசி வரை உடன்பிறந்தவர்களுடன் நல்உறவு..! #  பெற்றோர்களின் வறுமையைப் பார்க்காத இளமை..! #  எந்த வயதிலும் எந்த கல்வி  கலையையும் கற்கும் வாய்ப்பு..! #  பள்ளி, கல்லூரி நட்புகள் கடைசி காலம் வரை கூடவே பயணிப்பது மற்றும் பிரியமான நண்பர்கள் வாய்ப்பது..! #  நம் மனசுக்கு பிடித்தவருடன் திருமண வாழ்க்கை..! #  நாம் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடும் சுதந்திரம்..! #  அடிப்படைத் தேவைகளுக்கான சொத்து சுகத்தோடு இருப்பது..! #  எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்..! #  தீய பழக்கவழக்கங்களுக்கு  அடிமையாகாதிருத்தல் மற்றும்  தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உயர் பண்புகள்..! எல்லாவற்றிற்கும் மேலாக,                                             # *கடைசி காலத்தில் படுக்கையில் படுக்காமல் சாகும்வரை தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் வரமும்..! ...

வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது

வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது வாழ்க என்பது வாழ்த்துச் சொல். வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும். வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம். ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும்? தேவைகள் பூர்த்தியடையும் போது நிறைவுத் தன்மை ஏற்படும். தேவைகளை எப்படி பட்டியலிடுவது. மனிதனின் பொதுவானத் தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம். ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம். 1.உடல் நலம் 2.நீளாயுள் 3.நிறைச்செல்வம் 4.உயர்புகழ் 5.மெய்ஞானம். இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை. உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும். வாழ்க வளமுடன் என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும் போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துகிறார். இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதுனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன் பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது. அது என்ன ? வாழ்க வளமுடன் என்று இ...

பகவத்கீதை

பகவத்கீதை மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலைகுலைந்து போகச் செய்யும் சூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர்கள், நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புகள், சுக துக்கங்கள், இவையெல்லாம் மானிட வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள்! இதுபோன்ற போராட்டங்களை எல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும், பொறுமையுடனும், நிதானத்துடனும்,  எதிர்கொள்கின்ற மனிதன் எவனோ! அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரினமிக்கிறான். - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

நான்… நான்… நான்… என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ....

நான் நான்??? அற்புதவிளக்கம் ரமணமகிரிஷி,,, நான்… நான்… நான்… என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி .... மகான்களின் அவதார தினம் எனும் ஜெயந்தி விழாவின்போது வெறுமே பூக்களால் தூவி சில நிமிடங்கள் கண்மூடி நின்று நகர்வதெல்லாம் போதாது... அதை வெற்று சம்பிரதாயமாக மாற்றி விடக் கூடாது.... அந்த மகான் காட்டிய மார்க்கம் எப்படிப்பட்டது....??? என்பதை நிச்சயம் நினைவு கூற வேண்டும்... அந்த ஞானி காட்டிய பாதையில் நாம் திரும்புவதற்கான வாய்ப்பாகவே அந்த நாளை எடுத்துக் கொள்ள வேண்டும்... அப்படியே நாமும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் காட்டிய பாதையை அறிந்து கொள்வோம் வாருங்கள்.... கிரி உருவில் உள்ள அருணாசலம் வேங்கடராமன் எனும் திருப்பெயரில் மதுரைக்கு அருகிலுள்ள திருச்சுழி எனும் தலத்தில் அவதரித்தது..... மீண்டும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி எனும் திருநாமத்தோடு அருணாசலத்திலேயே வாழ்ந்தது..... பகவான் ரமணரின் அவதார நோக்கத்தை உற்று நோக்க நமக்கு கிடைப்பது ஒரேயொரு பதில்தான்..... அதாவது பகவான் தமது வாழ்வு முழுவதும் ஒரேயொரு உபதேசத்தை கூறிக் கொண்டேயிருந்தார்.... அதுதான் "நான் யார்.....??’’ எ...

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?         எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டு விடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக் கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும் தான். எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்து விடும்.  அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும்.  அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக் கொண்டே வருவதைப்போன்றது. நேர்மறை எண்ணங்களுக்கும் அதே போன்ற சக்தி உண்டு. எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும் போது அதைப் போக்க  உதவும் 10 விடயங்கள். 1. தியானம் ➖➖➖➖➖ தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறை நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம்.  ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழ வைக்கும் என்பதில் சந்தேக...

படித்ததில் பிடித்தது

"வயது கூடும் போது நோய்வரும்" என்று எந்த இயற்கையின் சட்டமும் கிடையாது. உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும், உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறார் /  படைத்திருக்கிறது. உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும், நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படவே படைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே எவனாவது, வயதானால் அந்த நோய் வரும், வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள். நம் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்துக் கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன. மனிதர்கள் மட்டும்தான், வயதானால் நோய் வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள். நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; ...

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்- வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருளால் ஆனவன் 1. உடல், 2.ஆவிஉடல்(சூட்சுமஉடல்) ,3.ஆன்மா - நாம் காணும் உடல் தூலசரீரம். மனம்,புத்தி,நான்-உணர்வால் ஆன லிங்க சரீரம் அதற்கு பின்னால் உள்ளது.அடுத்து ஆன்மா உள்ளது - பிரபஞ்சம் எந்த அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதே அமைப்பில்தான் அதன் ஒவ்வொரு பகுதியும் கட்டப்பட்டிருக்கும் - இந்த பொருள்களெல்லாம் எங்கிருந்து வந்தன?சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் வந்தது என்று கூறுவது தவறு. - இந்த பூமி குளிர்ந்துகொண்டே சென்று ஒரு காலத்தில் துண்டுதுண்டாக சிதறிவிடும்.மீண்டும் அந்த சிறதலிலிருந்து பூமி உருவாகும் - சூன்யத்திலிருந்து இந்த உலகம் படைக்கப்பட வில்லை. இறைவனிடமிருந்து வெளிப்பட்டது என்று சொல்வதுதான் சரி - உலகம் துவங்கிய காலத்தை நினைக்க தொடங்கினால்,அதற்கு முன் உள்ள காலத்தையும் நினைக்கவேண்டிவரும்.காலத்திற்கு துவக்கம் இல்லை - பிரபஞ்சத்தின் எல்லையை நினைக்க துவங்கினால் எல்லைக்கு அப்பால் உள்ளதையும் நினைக்க வேண்டிவரும்.அப்போது எல்லை பொருளற்றதாகி விடுகிறது - ஒரு பொருளை உருவாக்க சிறிது மூலப்பொருளும், உருவாக்...

அட்சயதிதியை பற்றி ஆதாரபூர்வமான தகவல்கள் மற்றும் தெளிவு

ஆரூரா.. தொண்டீசா. அட்சயதிதியை பற்றி ஆதாரபூர்வமான தகவல்கள்  மற்றும் தெளிவு ஆன்மீக பக்தகோடிகளுக்கு வணக்கம். அட்சயதிதி ஒன்று இருக்கிறதா ? இல்லையா? வரலாறு உண்டா? இல்லையா? உண்மை தகவல்கள் தான் என்னவென்று நாம் சிந்திப்போம்.. தெளிவடைவோம். அட்சய திதி அன்று நகைவாங்கினால் நகை வந்து  சேரும் என்று எந்த ஒரு புராணத்திலும் , இதிகாசத்திலும் , ஜோதிட சாத்திரத்திலும் குறிப்பிடவில்லை.. 1. ஜோதிட சாஸ்திரத்தில் ஆதாரம் : திதிகள் மொத்தம் வளர்பிறை திதி 14 .தேய்பிறை திதி 14. அமாவாசை 1. பௌர்ணமி 1. ஆக 30 நாட்கள் ஒரு மாதம். இதில் அமாவாசை அன்று நிலவு தெரியாது. ஆதலால் திதியில் பிரதமை , துதியை , திருதியை . இந்த திதியில் மூன்றாம் திதியில் தான் சந்திர தரிசனம்.  அதாவது மூன்றாம் பிறை வருகிறது. இதைதான் திருதியை என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த திதியைதான் கணக்கு வைத்து அதுவும் சித்திரை மாதம் வரும் திருதியை வைத்துக் கொண்டு அட்சய திருதியை என்று அழைக்கின்றனர். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில்  அதுவும் சித்திரை மாதம் வரும் வளர்பிறை மூன்றாம் திதியில் விவசாய பயிர்களுக்கு ஏற்ற நாள் தான்  என...

திருவுந்தியார் பாடல்

உள்ளும் புறம்பும் நினைப்பறின்  உன்னுள்ளே மொள்ளா அமுதாம் என்று உந்தீபற முளையாது பந்தம் என்று உந்தீபற. திருவுந்தியார் பாடல் எண்; 26 பொதுவான பொருள் : ......................................... நமக்குள்ளும், நமக்கு வெளியேயும் ஏற்படுகின்ற நினைப்பற்றுப் போனால் பேரானந்தம் பிறக்கும். அதன்பின் எவ்விதப் பந்தமும் ஏற்படாது. "குலசை மகானின்" ஞான விளக்கம்: ..................................    ..............................  முதலில் புறத்தைப் பார்ப்போம்.நாம் புறத்தை(உலகத்தை)ப் பார்க்கும் பொழுது நம்முடைய மனமானது, புறத்தே உள்ள நிஜத்றைப் பார்க்கவிடாமல் மனம் உண்டாக்கின பதிவையே காட்டுகிறது. பதிவுகளால் நாம் நிஜத்தை மறந்து, அந்தப் பதிவுகளின் அடிப்படையில் இயங்கத் துவங்குகிறோம். எடுத்துக்காட்டாக, வாசலில் வரும் ஒருவரைக் கண் காட்டுகிறது. அவர் ஒரு வாரத்திற்கு முன்பு நம்மிடம் சண்டையிட்டுச் சென்றவர்; அவரைப் பார்த்தவுடனே மனம் அவரைப் பற்றிய, பழைய பதிவுகளைக் காட்டி, வெறுப்பை உண்டாக்கி பதட்டமடைய வைத்து விடுகிறது.உண்மையில் அவர் வந்தது சண்டையிடுவதற்காகவா? அல்லது மன்னிப்புக் கேட்பதற்காகவா? ...